Monday, August 7, 2017

உறவு



அன்புள்ள ஜெ

கீசகனுக்கும் ப்ரீதைக்குமான உறவு பெரிய ஆச்சரியம். அவனுக்கு அவள்மேல் அன்போ மதிப்போ இல்லை. அவன் அவளைப் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் அவள் அவனை ஆழமாக காதலிக்கிறாள். இந்த ஆச்சரியத்தை என் சொந்தவாழ்க்கையிலே இரண்டுமுறை பார்த்திருக்கிறேன். பரம அயோக்கியன் மேல் அவ்வளவு பிரியமாகவும் அர்ப்பணமாகவும் பெண்கள் இருந்தார்கள். அவனுக்காக சாகிறார்கள். அவன் அவளுக்கு அடையாளம்கூட கொடுக்கவில்லை. அவளே நான் இன்னாரின் ஆள் என்று அடையாளம் தேடிக்கொண்டாள். ப்ரீதைக்கு அதுவும் இல்லை. இது ஏன் என வெண்முரசு சொல்லும் என நினைத்தேன். அதை அப்படியே கடந்துசென்றுவிட்டீர்கள்

ராஜ்