Monday, August 21, 2017

ரத்தவாடை





அன்புள்ள ஜெ

உத்தரன் போரைக் கண்டதுமே மாறிவிடுவது ஆச்சரியமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஆச்சரியம் அல்ல. வீணாய்ப்போகிறார்கள் என சில பையன்களை பார்ப்போம். சிலசமயம் ஏதேனும் தொழிலில் ஒரு ‘ரத்தவாடை’ கிடைக்கும். அப்படியே ஆளே மாறிவிடுவார்கள்.
உத்தரனைப்பற்றிய இரண்டு உவமைகள் கச்சிதம். சிம்மம் தன் குருதியால் குருதியை அறிகிறது. ஒரு நூலை ஒரே பார்வையில் வாசிப்பதுபோல அவன் ராணுவத்தைப்பார்க்கிறான். எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறான்

சண்முகம்