Tuesday, December 11, 2018

தெய்வக்குரல்



தொடக்கங்களை எப்போதும் நம்முள் இருக்கும் நுண்தெய்வங்கள் எச்சரிக்கின்றன. தன் வாழ்வை முற்றாகவே மாற்றிவிடும் பிறழ்வுகளை அந்த தெய்வத்தின் எதிர்ப்பை மீறியே மானுடர் செய்கிறார்கள். பிறகு எப்போதும் அந்த தெய்வத்தின் குரலை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்

வெண்முரசில் வரும் இந்தவரிகளை நான் என் வாழ்க்கை முழுக்கவே உணர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய தவறுகள் எல்லாவற்றையும் என் மனசுக்குள் இருக்கும் குரல் சொல்லச்சொல்லக் கேட்காமல்தான் செய்திருக்கிறேன். அதன்பின் அவ்வளவு துல்லியமாகக் கூறியதே அந்தக்குரல், ஏன் அதை நான் செய்யவில்லை என்று நினைத்திருக்கிறேன்

தெய்வமும் மனுஷனும் போட்டிபோட்டுக்கொண்டே இருக்கிரார்கள் மனுஷ மனசிலே என நினைக்கிறேன்.

ஜெ நான் உங்களுடன் அவ்வளவு ஆழமான முறையிலே பேசிக்கொண்டிருக்கிறேன்


டி.