Saturday, December 29, 2018

படைப்பாளி



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் இரண்டாம் அத்தியாயத்தில் படைப்பவன் தனது படைப்பின் மீதான விமர்சனத்தை எதிர்பார்ப்பதும், விமர்சகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பார்வையில் படைப்பை மதிப்பிடுவதும் அதை ஆராய்ந்து அதற்கு ஒரு சொலுஷனை படைப்பாளி அறிவிப்பதும் நடக்கிறது. பிறகு அந்த சொலுஷன் வேறோரு சொலுஷனை அளிக்க இரண்டும் ஈகோவினால் பகை கொண்டு போரிட ஆரம்பிக்க படைப்பு அப்படியே இருக்க சொலுஷன் தோற்கடிக்க படுகிறது. சமுகத்தின் மாற்றங்கள், வேத,வேதாந்த  நூல்களின் மாற்றங்கள் அனைத்தையும் இப்படி புராதன கதைகளினால்,குறீயிடினால்  சொல்லவும் தொகுக்கவும் முடியும் என்பதே ஆச்சரியம் அளிக்கிறது.அதையும் அசுரர்களிடம் அல்லது பழங்குடிகளிடம் தோன்றிய மூல அறிதல்கள் முதலாகவும் அவற்றை வைதீகர்கள் எப்படி மறுபதிப்பு பண்ணுகிறார்கள் என்பதை இரண்டாவதாகவும் கூறி ஒரு பேரல்லல் நடையில் கதையை ஆரம்பித்தது அதை புரிந்து கொள்ள உதவியது.

regards,

stephen raj kulasekaran.p