Monday, December 31, 2018

கதை




ஜெ

திருதராஷ்டிரர் பீஷ்மரை நினைவுகூர்ந்து சொல்லும் இடம் என்னை நெகிழச்செய்துவிட்டது. அவர் சிறுவனாகச் சென்று பீஷ்மரிடம் அடைக்கலம் கோருவதும் கடைசிவரை உன்னுடன் இருப்பேன் என்று பீஷ்மர் சொல்லுவதும் மழைப்பாடல்நாவலில் உச்சகட்ட உணர்ச்சிகரமான காட்சிகள். அந்தச் சொல்லை அவர் காப்பாற்றிவிட்டார். எவ்வளவு மகத்தான மனிதன் என்று தோன்றியது. இத்தனை நீண்ட ஒரு கதை. எங்கிருந்து எங்குவரை வாசித்து வந்திருக்கிறோம். ஒரு முழுமையான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறோம். நினைக்க நினைக்க மனம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது

செல்வி