Saturday, December 1, 2018

அம்பையின் சாபம்




அன்புள்ள ஜெ

அம்பையின் சாபம் அஸ்தினபுரியின் குடிகளில் பெண்கள் வழியாகத்தான் அழியாது நீடித்திருக்கிறது. அத்தனைபெண்ணும் அவர்களின் ஆழத்தில் அம்பைதான். ஆகவேதான் பீஷ்மர் களம்பட்ட செய்தியை சுபாகு சொன்னபோது பாஞ்சாலி அம்பையாக இருக்கிறாள். அவளுக்கே அது தெரிவதில்லை. பழைய காலத்தில் இப்படி ஒருவர் இன்னொருவராக உள்ளூர மாறுவது நடந்திருக்கிறது. மறைந்த என் பாட்டியின் உடலில் அவருடைய அம்மா இப்படி அவ்வப்போது வருவார்கள். விபூதிபூசினால் கொஞ்சநெரம் அழுதுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த இடம் ஒரு மெய்சிலிப்பை அலிப்பதாக இருந்தது

ராம்குமார்