Friday, December 7, 2018

வாழ்தல்




ஜெ


அப்படியென்றால் அவன் வாழ்ந்திருக்கிரானா இறந்திருக்கிரானா? அந்தப்போரில் அவன் அப்படி செத்திருக்காவிட்டால் அவனுடைய வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தமிருந்திருக்குமா? அது ஒரு தவம்தானே? அந்த நிலைக்கு அவன் உணரும் அச்சொற்கள் கண்டடைதலும் திகழ்தலும் கடந்துசெல்லலும் ஒரே நேரத்தில் நிகழும் கணங்கள். பெருகி எழுந்து ஒரு கணத்தில் நுழைந்து மேலும் பெருகி அதைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தான்.  தியானத்துக்கும் யோகத்துக்கும் சொல்லப்படும் வர்ணனைகளாக இருந்தன.  அதாவது அவன் ஒரு ஊழ்கநிலையில்தான் இருந்து செத்திருக்கிறான். அது அத்வைதநிலையாக இருந்திருக்கிறது. அவனும் புரவிகளும் தேர்களும் பீஷ்மரும் ஒன்றேயாக இருந்திருக்கிறார்கள். ஜெ, இதை பல இசைக்கலைஞர்கள், பல விளையாட்டுவீரர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் செயலாற்றும்போது அவர்கள் இல்லாமலாகிவிட்டிருப்பதைப்பற்றி. அந்தப்பகுதியே ஆழமானது

எஸ்.நாகராஜ்