Monday, December 17, 2018

ஓங்கியவன்




அன்புள்ள ஜெ,

கார்கடலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பழைய கார்ட்டூன் உண்டு. ஒரு சர்ச். அதில் பலவகையான பூச்சிகள் அமந்து வழிபாடு செய்கின்றன. தெய்வமாக அங்கே மாட்டப்பட்டிருப்பது ஒரு மனிதனின் உள்ளங்கால். அவர்களை மிதித்துச்செல்லும் ஆம்னிபொட்டண்ட் ஆன ஆற்றல் அது. அறியவோ விளக்கவொ முடியாதது

அதேதான் இங்கேயும் நிகழ்கிறது இல்லையா? அந்த மாபெரும் காலை என்னால் கற்பனைசெய்துகொள்ள முடிகிறது. ஓங்கி உலகளந்தவனின் கால் அது

சாரங்கன்