Friday, December 7, 2018

தந்தையைக் கொல்லுதல்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

"திசைதேர்வெள்ளம்" திடீர் என முடிந்ததுபோல் மனம் எண்ணினாலும் ஒருவாறு மனம் அதை எதிர்பார்த்திருந்தது.பீஷ்மரின் முடிவைநோக்கி மூன்று அதிகாரம் பீஷ்மரின் படுகளத்திற்கு பின் மூன்று அதிகாரம் என ஒரு உச்சகட்ட நிறைவுகாட்சியுடன் முடிந்ததுபோல் உள்ளது.

சுபாகு மைந்தர் அற்ற மரணத்தை நோக்கியிருக்கும் ஒருவனின் உடல் முன் தனது மைந்தனை நினைத்து கவலை கொள்கிறான்.அவனுக்கு அன்னமும் தண்ணீரும் அளிக்கும்படி அர்ஜுனிடம் கூறுகிறான். சுபாகுவின் மனம் முழுவதும் மைந்தர் அற்ற பீஷ்மர் என்ற எண்ணமும் அதனாலேயே தனது மைந்தன் என்ற எண்ணமும் வந்திருக்கலாம்.

தந்தையை கொடூரமாக வேட்டையாடாவிட்டால் நாம் நம்மையும் அவரையும் கடந்து சென்று இவ்வுலகத்தில் அடைவதற்கு எதுவும் இல்லைதான். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்