Thursday, December 6, 2018

பழி


ஜெ

அம்பை தன் பழியை முடித்துவிட்டாள். கண்ணீருடன் பீஷ்மரின் காலடியில் அமர்ந்திருக்கிறாள். ஆனால் அவளிடம் தொடங்கிய அந்தப்பழி வளர்ந்துகொண்டே செல்கிறது. முடிவில்லாமல் வளர்கிறது. இனிமேல்தான் மிகப்பெரிய அழிவை உருவாக்கப்போகிறது. அதைத் தடுக்க அம்பையாலும் முடியாது. அவள் கண்ணீர்விடுவது அந்த உண்மையை உணர்ந்ததனால் என நினைக்கிறேன்

அம்பையிலிருந்து அந்தப்பழி திரௌபதிக்கு வந்திருக்கிறது. அங்கிருந்து மீண்டும் அந்தப்பழி வளர்ந்து செல்கிறது. அந்தப்பழிக்கு முடிவே கிடையாது. பழி தொடங்குவது மனிதரிடம்., முடிவது விதியிடம்

செந்தில்குமார்