Monday, December 17, 2018

குகை




அன்புள்ள ஜெ

குகை கதையை வாசித்தபோது இந்த கார்கடல் நாவலை நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் மனநிலையை ஒருவாறாக ஊகிக்க முடிந்தது. ஒரு ஆழத்துக் குகைப்பாதையில் அனைத்துக்கும் அடியில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். மனக்கொந்தளிப்பும் தனிமையும் இருக்கும். அந்த ஆழத்தில் நீங்கள் துரோணரையும் கர்ணனையும் எல்லாம் சந்திக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் அந்த மனநிலையை செந்நாவேங்கை வாசித்தபோதே உணர்ந்திருந்தேன்

ஜெயராஜ்