Monday, December 17, 2018

கார்கடல்



அன்புள்ள ஜெ,

அடுத்த நாவல் துரோண பருவம். எனவே இயல்பாக வண்ணக்கடலின் நீட்சியாக அமையவே வாய்ப்புகள் அதிகம் என நினைத்தேன். இதோ பெயர் அதைத் தாங்கி வந்து விட்டது. வண்ணங்கள் அடர்த்தியானால் கருமை தானே!! ஒடுக்கப்பட்டவர்களின் குரோதம் தொகுக்கப்பட்ட கடல்!!! துரோணர், எகலவ்யன், கர்ணன்... ஒவ்வொருவரும் சஞ்சயன், பார்பாரிகன் மற்றும் அரவான் பார்வையில். அறம் என வகுக்கப்பட்டவற்றை மீறிப் பாயும் திசையைத் தேர்ந்தெடுத்த வெள்ளம் சென்று சேரும் கார்கடல்!! பேரமைதியும், பேரலையுமாக பொங்கி சூழட்டும்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்