Sunday, December 9, 2018

ஊக்கம்


அன்புள்ள ஜெ

இந்த கடிதங்கள் பகுதியில் ஸ்டீபன் என்பவரின் படத்தைப்பார்த்தேன். அவர் இப்போது நிறைய எழுதுகிறார். இப்படி அவ்வப்போது சிலர் உங்களுக்கு ஆவேசமாக கடிதங்கள் எழுதுகிறார்கள். சிலர் அப்படியே எழுத்தாளர்களாக ஆகிவிடுகிறார்கள். சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே மறைந்து போய்விடுகிறார்கள். உதாரனமாக வெண்முரசிலே நிறைய கடிதங்களை எழுதியவர்கள் ராமராஜன் மாணிக்கவேல். தண்டபாணி துரைவேல். இருவரும் படங்கள் வெளியிட்டிருந்தீர்கள். இப்போது அவர்கள் வெண்முரசு வாசிப்பதில்லை என நினைக்கிரேன். எனக்குத்தெரிந்து பலர் நிறுத்திவிட்டார்கள். பலர் வாசிக்க ஆரம்பித்தார்கள். பலர் நிறுத்திவிட்டு மீண்டும் ஆரம்பித்தார்கள். அன்றுமுதல் இன்றைக்குவரை ஒரே ஊக்கத்துடன் வாசிப்பவர்கள் கொஞ்சபேர்தான். அதைப்பார்க்கையில்தான் எழுதும் உங்களின் ஊக்கம் எனக்க்கு பிரமிப்பாக இருக்கிறது

சுதாகர்