Monday, December 10, 2018

ஊழ்



அன்புள்ள ஜெ

திசைதேர்வெள்ளம் என்ற பெயர் தன் திசையை தானே தேர்வுசெய்யும் வெள்ளத்தைக் குறிக்கிறது. அது ஊழ். இந்த மகாபாரதப்போரின் மிகப்பெரிய சித்திரம் வாழ்க்கை ஊழின் கைகளில் சருகு போல சென்றுகொண்டிருப்பதையே காட்டுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் ஊழின் அலைகளில் மிதந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எவருடைய கேள்விகளுக்கும் எந்தப்பதிலையும் சொல்லாமல் செல்கிறது

பெரிய கதாபாத்திரங்களும் சின்னக்கதாபாத்திரங்களும் இந்நாவலில் ஒரே போல போரின் பெருக்கில் ஒழுகிச்செல்கிறார்கள். அற்பர்களும் மாவீரர்களும் ஒரே விதமாகவே அலைக்கழிகிறார்கள். எவருக்கும் எந்த இரக்கமும் விதியால் காட்டப்படுவதில்லை. நீர்வழிப்படூம் புணைபோல என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. பெரியோரை ஏத்துதலும் சிறியோரை இகழ்தலும் செய்யமாட்டேன் என்று சொல்வது ஊழ்தான்

எஸ்.ஆனந்த்