Saturday, December 8, 2018

பீஷ்மரும் காமமும்


ஜெ


போர் சாவு என்று கடைசி அத்தியாயங்கள் வேகமாகச் சென்றமையால் சில சூட்சுமமான விஷயங்களைக் கவனிக்காமல் சென்றுவிட்டேன். பொறுமையாக கடைசி பத்து அத்தியாயங்களை வாசித்தேன்


“குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” 

என்று யுதிஷ்டிரர் சொல்கிறார். அதற்கு  பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். 

“எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்றான் பீமன்.

இந்த இடம் என்னை பாதித்தது. நினைத்துக்கொண்டே இருந்தேன். காமத்தில் ஈடுபடுகிறவனைப்போலவே காமத்தை ஒடுக்குகிறவனும் அதனால் அலைக்கழிக்கப்படுகிரவன் அல்லவா? யோகமோ ஞானப்பயணமோ இல்லாமல் வெறுமே காமத்தை அடக்கிய பீஷ்மரின் மனம் எப்படிப்பட்டது?

அவர் அம்பையை ஏன் இழிவுசெய்தார்? ஏன் அவரால் திரௌபதியின் துக்கத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை? அதற்கான விடை இங்கே உள்ளது


டி.திருஞானசம்பந்தன்