Tuesday, December 4, 2018

பீஷ்மரும் சகுனியும்




அன்புள்ள ஜெ

பீஷ்மரின் உடல் வீழ்ந்துகிடக்கும்போதுகூட சகுனி பதறாமல் சதிவேலைகளில்தான் ஈடுபடுகிறார். அந்த வீழ்ச்சியின் மூலம் என்னென்ன பயன் வரும் என்று கணக்கிடுகிறார். அதன் பயனை மற்றதரப்பு அறுவடைசெய்ய விடக்கூடாது என்று நினைக்கிறார். அந்தமனநிலையை அவரிடம் எப்போதும் காணமுடிகிறது

ஆனால் அவர் பீஷ்மரை தந்தை வடிவமாக நினைத்தவர். பீஷ்மர் தன்னை அடித்ததை ஒரு ஆசியாக எடுத்துக்கொண்டவர். ஆனால் அதெல்லாம் அந்த பாலைவன ஓநாயின் கடிவாங்கி நஞ்சு ஊறுவதற்கு முன்பு

பாஸ்கர்