Monday, December 31, 2018

வருகை



அன்புள்ள ஜெ,

கார்கடலின் துவக்க அத்தியாயங்கள் பற்றித் தான் எழுத வேண்டும் என குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். இருப்பினும் இன்று துரியன் கொண்ட உளமகிழ்வு என்னைத் தொற்றிக் கொண்டது. ஆம், அங்கரின் வருகையைத் தான் சொல்கிறேன். உண்மையில் பெரும் ஆசுவாசம்.... ஏனென்று தெரியவில்லை. சகுனியின் சொற்களைத் தான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்... 'இந்த களத்தில் அவன் எதைச் செய்தாலும் தவறில்லை...' ஆம், அவன் சூரியன். தொட்டவற்றைப் பொன்னாக்கும் அவனே சுட்டெரிக்கவும் செய்கிறான்... எரிக்கட்டுமே!! சூழ்ந்த கருமேகங்கள் விட்டு ஒளி வீசி வரட்டுமே!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.