Wednesday, December 5, 2018

பீஷ்மரும் கிருஷ்ணனும்




ஜெ

பீஷமரைக் கொல்ல கிருஷ்ணன் சக்கரத்தை எடுக்கும் காட்சியை நான் பரதநாட்டியத்தில் பார்த்திருக்கிறேன். அதில் அர்ஜுனன் நானே கொல்கிறேன், நீ உன் விரதத்தை முறிக்கவேண்டாம் என்று கெஞ்சுவான். அந்தக்காட்சி வெண்முரசில் வேறுமாதிரி வந்திருந்தது

பீஷ்மரைக்கொல்ல கிருஷ்ணன் இறங்கியது பீஷ்மரின் பேருருவத்தைக் காட்டுவதற்கான காட்சி என்றே நினைக்கிறேன். ஆனால் பீஷ்மரின் வீழ்ச்சியின்போது கிருஷ்ணன் அவரைக் கொன்றுவிட்டான் என்ரே தோன்றியது

ஆர்.ரகு