Sunday, December 9, 2018

வசுக்கள்



அன்புள்ள ஜெ

இந்தக் கடிதத்தளத்தில் சுட்டி அளிக்கப்பட்டதனால்தான் நான் முதற்கானல் அத்தியாயத்தை வாசித்தேன். வாசித்து ஆறாண்டுகள் ஆகப்போகின்றன. மறந்தேவிட்டேன். மேலும் அதன்பின் வந்த இந்தக்கதையை வைத்துத்தான் அந்த அத்தியாயத்தில் வரும் கிண்டல்களை ரசிக்கமுடியும். உங்கள் மனதில் அந்த அத்தியாயம் இருந்திருக்கிறது. எங்கல் மனதில் இப்போதுதான் அது வருகிறது


பீஷ்மராகிய வசு நைச்சியமாகக் கேட்கிறது.   “அன்னையே நான் இங்கே பாவங்களைச் செய்தால் நீங்களே என்னை மீண்டும் மைந்தனாகப் பெற்று அப்பாவங்களைத் தீர்க்க அருள் புரியவேண்டும்”

ங்காதேவி அந்தக்கோரிக்கையில் உள்ள இக்கட்டை உடனே புரிந்துகொண்டு சொல்மீட்சி அளித்தாள். நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய்

எவ்வளவு பொருள்பொதிந்த வரிகள். மொத்த குருகுலத்தையே போருக்குக்கொண்டுவந்துவிட்டுவிட்டு பிறவியறுக்க அவர் காத்துக்கிடக்கிறாள்

ராஜசேகர்