Sunday, December 9, 2018

சிங்கம்



ஜெ

பீஷ்மரை முதற்கனலில் விவரித்திருக்கும் ஒரு பகுதியின் பெயர் வேங்கையின் தனிமை. அந்த வரி என்னை ரொம்பநாள் கற்பனையில் ஆழ்த்தியிருக்கிறது. ஆண்வேங்கை மிகமிகத் தனிமையான விலங்கு. அதோடு அதற்கு ஒரு குணாதிசயம் உண்டு. தன் காட்டுக்குள் தனக்கு எதிரிகள் வந்துவிடக்கூடாது என்று தன் குட்டிகளைத்தேடித்தேடிக் கொல்லும். பீஷ்மரின் இயல்பும் அதுதான். அது திசைதேர்வெள்ளத்தின் தொடக்கத்திலேயே வந்துவிட்டது

அவருடைய சிவந்த தாடியைப்பற்றிய சித்திரம் வந்தபடியே இருந்தது. ஆகவே நான் அவரை ஒரு சிங்கமாகவே கற்பனைசெய்துகொண்டேன். சிங்கத்தின் வீழ்ச்சிதான் அவருடைய சாவு.

ஜெயராமன்