Monday, December 10, 2018

மூவர்




அன்புள்ள ஜெ,


இந்நாவலில் இப்போது மூன்றுபேர் போரை வெளியே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சஞ்சயன். அவர் பார்க்கும்போர் தெய்வங்களின்போர். அதன் விரிவை நாம் பார்த்துவிட்டோம். மேலும் இருவர் போரைப்பார்க்கிறார்கள். கடோத்கஜனின் மகன் பார்பாரிகனும் தலைவெட்டப்பட்ட அரவானும். அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பது என்ன போர் என நமக்குத்தெரியவில்லை. அந்தப்போர் என்ன என்பதை நான் ஒருவாறாக ஊகிக்கிறேன். அடுத்த நாவல் இந்த மூன்றுபேரின் பார்வையில் வரும் மகாபாரதப்போராக இருக்குமென்று தோன்றுகிறது. ஒருவர் ஷத்ரியர்களின் பார்வை. இன்னொருவர் அரக்கர்களின் பார்வை. இன்னொருவர் நாகர்களின் பார்வை. போரின் ஊடாட்டம் சரியாக வந்துவிடும். சரியா?

சாரங்கன்
அன்புள்ள சாரங்கன்
இன்றுவரை எவரும் இவ்வளவு அணுக்கமாக என்னை தொடர்ந்ததில்லை

ஜெ