Monday, December 3, 2018

உச்சம்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் திசைதேர்வெள்ளத்தின் உச்சம் என்று எனக்குப்பட்ட இடம் துண்டிகனின் பார்வையில் அந்தப்போர் வருவதுதான். அர்ஜுனன் அல்ல அத்தனை பாண்டவர்களும் சேர்ந்துதான் அந்த அம்பை ஏவுகிறர்கள். அதுதான் அம்புப்படுக்கையாக ஆகிறது. அந்த அம்புகள் அவர் மேல் மானசீகமாக வந்து பட்டுக்கொண்டேதான் இருந்தன. அவரைக்கொன்றது எல்லா மைந்தர்களும் சேர்ந்துதான். அத்தனைபேருக்கும் அதில் பங்குண்டு

சரவணக்குமார்