Tuesday, December 18, 2018

அந்தரீயம்



ன்பு ஜெயமோகன் அவர்களுக்கு



மேலாடை பற்றிய உங்கள் விளக்கம் படித்தேன்மேலாடை பழக்கம் பழங்காலத்தில் இருந்ததா என்றால் இருந்தது என்றே சொல்வேன். அதற்கு சமஸ்கிருதத்தில் உத்தரியம் (உத்தர – மேல்தரியம் – ஆடை) என்று வழங்கப்படும்.


அந்தரீயம் என்பது உள்ளாடையாக இருக்கக் கூடும். அந்தர் என்பது உள்ளே என்பதைக் குறிப்பிடக் கூடியது. அந்தரங்கம் என்று நாம் சொல்வது கூட இந்தப் பொருளில்தான்.


பூணூல் கூட ஒரு வகை உத்தரீயமே. திருமணம் நடக்கும் பொழுது இதை பிராமண புரோகிதர் விளக்கி இருக்கிறார்.


பிரம்மச்சாரிகள் ஒரு முடி (மூன்று இழைகள்) கொண்ட பூணூலை அணிவர்திருமணத்தின் போது இரண்டாம் முடி அணிவிக்கப்படும். அப்பொழுது அணிந்திருக்கும் உத்தரீயம் அதாவது மேல் துண்டு மூன்றாவது முடியாக கருதப்படும். திருமணத்தின் பின்பு மூன்று முடிகள் கொண்ட பூணூல் அணிய வேண்டும்.


பூநூல் இன்றி வேத காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அறம் பயிலாமல் எந்தவிதக் கர்ம கார்யங்களையும் செய்யக் கூடாது என்பதற்காக பூநூல் அணிவித்து வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. காயத்ரி மஹா மந்திரத்தை மணமகனின் வலது காதில், அவன் தகப்பனார் உபதேசம் செய்ய வேண்டும். உபதேசம் செய்யும் போது அவர் தமது வலது கையை மகனின் சிரசில் வைத்து இருக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட ஒற்றை முடிப் பூ நூலை மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டும்.


இம் முதற் பூநூல் (ஒற்றை முடி) தாய் தந்தையரால் அணிவிக்கப்பட வேண்டும். இது “பிரம்மோபதேசம்“ எனப்படும். இதன் பின்னரே மணமகன் விவாகத்திற்கான பூஜையாகங்களில் பங்கேற்க இயலும்.கன்யாதானம் செய்த பின் பெண்ணின் பெற்றோர் ஒற்றைமுடி உள்ள ஒரு பூநூலை மணமகனுக்கு அணிவிக்க வேண்டும். இத்துடன் மணமகன் இரண்டு முடியுடன் கூடிய பூநூல் அணிகின்றான்.


மூன்றாம் முடி உத்தரீயத்திற்குப் (மேல் துண்டுக்குப்) பதிலாக அணிவது என்பது சாஸ்திரம்.”


ஒரு மனிதன் எக்காலத்திலும் நிர்வாணமாகவோ அல்லது ஒற்றை ஆடையுடனோ இருத்தல் கூடாது என்பதால் உத்தரியமாக பூணூலும் அந்தரியமாக அரைஞாணும் பூண்டே இருப்பான்.ஆகவே வைதீக நெறி பின்பற்றிய அனைவருமே இந்த ஈராடைகளை அணிந்தே வந்திருக்கலாம். திரௌபதி தர்பாருக்கு இழுத்து வரப்பட்டபோது ஒற்றை ஆடை அணிந்து வீட்டு விலக்காக இருந்தாள் என்பதையும்ஒற்றையாடையுடன் சபைக்கு செல்வது இழிவு என்பதையும் வியாசர் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்.

மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்

மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்உத்தரீயம் என்னும் மேலாடையும் இன்றி வைதீக மக்கள் இருந்ததில்லை என்பதே உண்மை.

தாமரை செல்வன்


தாமரை செல்வன்

தாமரை செல்வன்