Thursday, December 6, 2018

எட்டு


அன்புள்ள ஜெ


நலம்தானே?

வெண்முரசு திசைதேர்வெள்ளத்தை மிகுந்த உத்வேகத்துடன் வாசித்தேன் திசைதிருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக அம்புபோலச் சென்றது கதை. எட்டு வசுக்களும் விலகிச்செல்வார்கள் என்பதுதான் கதை என்பதனால் ஒரு வடிவம் மனதில் வந்தது. அந்த வசுக்கள் எப்படி எதன்பொருட்டு விலகிச்செல்வார்கள் என்ற சஸ்பென்ஸ்தான் அவ்வளவு ஆர்வமாக வாசிக்கச் செய்தது ஏனென்றால் இத்தகைய கதைகளில் எல்லாமே நமக்கு முன்னடியே தெரிந்திருக்கின்றன. இந்தக்கதைகளை நாம் மீண்டும் வாசிக்கும்போது எதிர்பார்க்கவும் காத்திருக்கவும் நமக்கு கொஞ்சம் தேவைப்படுகிறது. அதை இங்கே நம்மால் எடுத்துக்கொள்ள முடிகிறது. நாவல் முடிந்தபோதுதான் எட்டுவசுக்கள் என்ற எட்டு நிலைகளும் நாவலுக்கு ஒரு தத்துவார்த்தமான கட்டமைப்பை அளிப்பதை நான் புரிந்துகொண்டேன். எட்டு தெய்வங்கள். அவை கங்கர்கலின் எட்டு தெய்வங்கள். அவை விலகிச்சென்றபின்னர்தான் காங்கேயனாகிய பீஷ்மர் கொல்லப்படுகிறார்.

நா.மாரப்பன்