Saturday, June 2, 2018

முதல் வைணவன்


அன்புள்ள ஜெ

செந்நா வேங்கை தீவிரமான ஒரு நாவலுக்குரிய மென்மையான தொடக்கம். எழுந்தழலுக்கு முந்தைய கிருஷ்ண்னை நாம் காண்கிறோம். அதே சாத்யகி. மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களனைவருமே போருக்குச்செல்கிறார்கள் என்பதன் பதைப்புதான் நாவலை எதிர்பார்க்கச் செய்கிறது. திரும்பத்திரும்ப வரப்போகும் அந்த மரணத்தாண்டவம் நினைவூட்டப்படுகிறது. பத்து மைந்தரையும் கொண்டுவந்து தன் தலைவனுக்காகப் படைக்கும் சாத்யகியின் கதாபாத்திரம் அவன் அறிமுகமாகி அடிமைமுத்திரை போட்டுக்கொள்ளும் இடம் முதல் எப்படி துலங்கி வருகிறது என நினைத்துக்கொண்டேன். வைணவர்களின் அந்த ஐந்து முத்திரைகள்தான் அவை . அனைத்தையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் சாத்யகிதான் முதல் வைணவன்

ஜெயராமன்