Tuesday, January 5, 2016

ஊழின் மைந்தன்.



கர்ணன் ஊழின் மைந்தன்.  இன்னுமொரு தவறையும் செய்து கொண்டே இருக்கிறான், அவன் தன்னைச் சுற்றி யிருக்கும் ஒவ்வருவரிடமும் தன்னையே முழுதும் ஒப்பு வித்துக்கொண்டே இருக்கிறான், ஒரு முறையல்ல, பல முறை.  அதற்கு அவன் தான் பொறுப்பாளி. ஒரு இன்சொல் சொல்லி, தலை கோதி, கை பற்றி எதையும் பெற்று விட முடியும் அவனிடம். அவ்வியல்பு கொண்ட எவனையும் மேலும் ஒரு படி மேற்சென்று எங்காவது ஆழமாக தைக்கும் படிக் குத்தி பார்த்து விடவே மானுடம் மனம் விரும்பும். அது மானுடனாய் பரிணாமித்த பேர் இயர்க்கையின் ஊழ் போலும்.

சுந்தர வடிவேலன்