Sunday, January 3, 2016

கண்ணீர்


 



அன்புள்ள ஜெ சார்

நீ அறுந்து விழுந்த மரத்தின் காம்பிலிருந்து பாலூறிக்கொண்டிருக்கக்கூடும் என்னும் வரியில் கண்ணீர் விட்டுவிட்டேன். விதுரரை விட குந்தியை நெருக்கமாக அறியக்கூடியவர் வேறு யார் என்று நினைத்தேன். 

கர்ணனின் பிரச்சினையும் இதுதான். அவனுடைய உள்ளத்திலிருந்து ரத்தம் ஊறிக்கொண்டிருக்கிறது. இந்த துயரநாடகம் அவன் சாவில்தான் முடியப்போகிறது என நினைக்கும்போது மனம் மேலும் கனக்கிறது

செல்வா