Tuesday, March 1, 2016

காளிகர் சொல்லும் கதை





ஜெ,

காளிகர் சொல்லும் கதையின் down to earth தன்மை முந்தைய அங்கதநாடகத்தின் fantasy க்கு நேர் எதிராக உள்ளது. இரு தரப்பும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாக இணைந்து ஒரு பெரிய சித்திரத்தில் இணைகின்றன. ஒரு பெரிய குல அழிப்பு. கூடவே குலங்களின் இணைப்பு. விளைவாக நிகழ்ந்த போர் அது

அதை வியாசர் பதிவுசெய்தார் என்பது அவர் ஒரு பெரிய காவியகர்த்தர் என்று காட்டுகிறது. அனைவருக்கும் அவர் நியாயம் செய்திருக்கிறார். அதை மழுப்பாமல் நீங்களும் பதிவுசெய்கிறீர்கள்

சாரங்கன்