Wednesday, June 28, 2017

நளபாகம் பீம பாகம்



பீமன் அன்னம் உண்பதும், அடுமனையில்  சமைப்பதும்  வாசிக்க  அத்தனை அருமை. அதிலும் அந்த  இளங்காற்று வந்து சுழன்று செல்வதும்  நெருப்பு இதழ் இதழாக மேல் எழுவதும்,குரங்குகள் முதலில் சாப்பிடுவதும் அழகு.அந்த சமயத்தில் பீமனை ஒரே ஒருவர் அடையாளாம் கண்டு கொள்வதும் அருமை
.. 
 
சிறிய அளவில் சமைப்பதற்கும் அதே பொருளை அதிக அளவில் சமைப்பதற்கும் இருக்கும் வேறுபாடு ஆச்சரயமளித்தது  ஆனால் நளபாகம் பீம பாகம் என்று சொல்கிறரே, இப்போது வந்திருப்பது பீமன் என கண்டு கொள்ள மாட்டார்களா இப்படி சொல்கையில்? . குருதியை ஏன் நளன் உண்விலிருந்து ஏன் விலக்கினார் என்பதற்கும் ஆச்சர்யம் அளிக்கும் விளக்கம்.
பலராமர், துரியோதனர், பீமன் இவர்கள் மூவரையும் அங்க நாட்டரசர் கர்ணர் வெல்லலாம் என பீமன் சொலவதை வாசிக்கையில் உடல் மெய்ப்பு கண்டது.பீமனுக்கு கர்ணன் மேல் எத்தனை வெறுப்பு இருந்தாலும் அவன் பிறப்பு குறித்த சந்தேகம் இருந்தாலும் அவன் வீரத்தில் என்றும் நல்ல மரியாதை இருக்கிறது அதை மதிக்கத்தெரிந்த வீரன் பீமன்.
 
 
இளைய யாதவனின் வீரம் பற்றி சொல்கையில் குழந்தைகளின் விளையாட்டை உதாரணமாக்கி அவனை தீராத விளையாட்டு பிள்ளை என்றும் அவன் கைகளின் விரைவையும் அழகாக சொல்லுகிறார். இந்த மாற்றுருக்கொள்வதை சொல்லும் சில அத்தியாயங்களிலேயே சமையல் மற்போர் நடனம் குதிரைகள், சகதேவனின் கணித்தல், இருபாலினம் என பல விஷயஙகளை ஆழமாக அழகாக சொல்லி இருக்கிறார்

 லோகமாதேவி,