Friday, July 27, 2018

அரவான்


அன்புநிறை ஜெ,

 

//நாகங்கள் பிறக்கையில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பார்கள். நாகமகவு வளர்ந்து தன்னை ஆணென்றோ பெண்ணென்றோ ஆக்கிக் கொள்கின்றது. ஆண் பெண்ணாவதோ பெண் ஆணாவதோ நாகங்களில் இயல்பே.//
காண்டீபம் 17 - உலூபியிடம் அர்ஜுனன் கூறுகிறான்.

அன்று தற்பலி கொடுத்த இளைஞனை மீண்டும் கனவில் கண்டு திடுக்கிட்டு எழுகிறான். அவனும் தன் தலையறுத்த இறுதிக்கணத்தில் தன்னை அடையாளம் கண்டுகொண்டதாகவோ விடைபெற்றுக் கொண்டது போன்றோ உணர்கிறான்.  

“அவன் விழிகளை மிக அருகே என இப்போது கண்டேன். அவனை நான் முன்பே அறிவேன். முன்பெங்கோ கண்டிருக்கிறேன்” என்றான்

“ஆனால் அதில் ஐயமில்லை, அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். நான் இன்னமும் அவனை அறியவில்லை. எங்கோ… காலமடிப்புகளில் எங்கோ, எனக்காக அவன் காத்திருக்கிறான் போலும்.”

 “ஆம், இத்தருணம் என்னுள் மைந்தனென முளைக்கும்”  என்று உலூபி சொல்கிறாள்.

ரோகிணி இன்று அனைத்தையும் கிளர்த்திவிட்டாள்.

மிக்க அன்புடன்,
சுபா