Tuesday, July 31, 2018

குலாடபுரியின் இளவரசர்கள் - ஏகலைவன்



அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
   
வணக்கம் .குலாடபுரியின் இளவரசர்கள் ஸ்வேதன் ,சங்கன்  கதாபாத்திரங்கள் , மற்றும் இளைய பாண்டவர் அர்ஜுனரின்குருதியில் நாகர்குலத்து அரசி உலூபியின் வயிற்றில் பிறந்த மைந்தன் அரவான் வழியாக குருஷேத்திர யுத்த களத்திற்குகௌரவ சேனைகளும் ,பாண்டவ சேனைகளும் மேற்கொண்ட படை நகர்வுக்கான  வழிமுறைகள் ,உணவு முறைகள்விரிவாக விளக்கப்பட்டன .இது போருக்கு முன்பு மூத்தோரிடம் சொல்லாசிகள் பெற்று நகர் நீங்கிய படைகளை அடுத்தஅத்தியாயத்தில் போர் முனையில் கண்ட எங்களுக்கு ஒரு புதிய அனுபவங்கள் தான் . பதினெட்டு காளைகளால்இழுக்கப்பட்டு நாற்பத்தெட்டு சகடங்களின் மேல் மெல்லிய அதிர்வுடன் ஒழுகிக்கொண்டிருந்த மாளிகைகள் ,பொடித்தவஜ்ரதானியமும் உலர் ஊனும் உப்புடன் சேர்த்து உருட்டப்பட்ட ஊன்துண்டுகள்,கவசங்களிலும் உடலிலும் எண்களையும்குறிகளையும் எழுதும் பணி என மிக விரிவாக எழுதியுள்ளிர்கள் . 


அது மட்டும் அல்ல ஸ்வேதன் ,சங்கன் ஆகிய இருவருமேவிராட அரசரால் பதினேழாண்டுகளாக மைந்தர் என்ற உரிமையை துறந்து/இழந்து  வாழ்ந்தவர்கள் .ஆம் அரச வம்சத்தில்பிறந்தும் தந்தையின் பாரா முகம் குல முறைமைகளை மேற்கொள்ள முடியாதபடி அவர்களின் எதிர் காலத்தை இடர்செய்யும் அம்சமாக அவர்களை சங்கிலியால் கட்டப்பட்ட யானையென மாற்றியது .ஆயினும் அந்த இக்கட்டில் இருந்துஅவர்கள் மேலெழும்பி பிரகாசிக்க ,அவர்களின் தன்னிறைவிற்கான செயலாக அவர்கள் கருதியது குருஷேத்ர யுத்தத்தில்கலந்து கொள்ள முடிவுகள் எடுத்ததே .உண்மையிலே தந்தையால் பன்னெடுங்காலம்  தள்ளி வைக்கப்பட்ட குலாடபுரியின்இளவரசர்கள் ஸ்வேதன் மற்றும் சங்கன் தங்களின் தந்தை விராட அரசரை பழிவாங்க சேர்ந்திருக்க வேண்டிய இடம்கௌரவ மூத்தோன் துரியோதனன் படையில் தான் .அப்போது தான் போரில் எதிர் முகம் நிற்கும் தந்தையை பழிவாங்கமுடியும் .

ஆனால் அதனை அவர்கள் விரும்பவில்லை .அவர்கள் அரசமுடிக்காகவோ ,செல்வத்துக்காகவோ,குடிபெருமையை நிலை நிறுத்தவோ அல்லது அன்னையின் ஆணைக்காகவோ யுத்தத்தில் பாண்டவ யுதிஷ்டிரர் படையில்அணி வகுத்து நிற்க வரவில்லை .ஆம் எப்படி துரோணாச்சாரியாரை மானசீக /ஆத்ம குருவாக ஏற்று ஏகலைவன் தனுர்வேதம் பயின்றானோ ,அது போல தான் இவ்விரு இளவரசர்களும் இளைய பாண்டவர் அர்ஜுனன் மற்றும் பீமன் அவர்களைமனதில் துதித்து வில் மற்றும் கதை பயின்றனர்

 . "நான் வில்பயின்றது இளைய பாண்டவரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி.அவன் பீமசேனரின் மாணவரென்று கதை பயிண்றான்இங்கு வந்து எங்கள் முழுதளிப்பை அவர்களுக்கு காணிக்கையாக்கவிழைந்தோம் என்றான் ஸ்வேதன் .ஆம் போருக்கான முறைமை அழைப்புகள் எதுவும் இல்லாமலும் ,குடியவை ஒப்புதல்இல்லாமலும் ,தங்களின் போருக்கான ஆசையை சொல்லி அன்னையின் ஆசியை மட்டும் பெற்று குருஷேத்ர போரில்அர்ஜுனன் மற்றும் பீமனுடன் சேர்ந்து களம் நிற்க யுதிஷ்டிரர் அவையில் இளைய யாதவர் சொல்லால் ஒப்புதல் பெற்றுவிட்டனர் .ஆம் இன்றைய வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை – 

61 மூத்தோர் சொல்லும்தந்தையரின்அச்சமும்குலத்தோரின் விலக்கும்துணைவியின் விழிநீரும் படைக்குச் செல்பவனுக்கு குறுக்கே நிற்கலாகாது என்பதுதொல்வழக்குஇவ்விளையோர் படைகொண்டு இத்துணை தொலைவு வந்ததே இவர்களின் ஊழ் செலுத்துவதனால் தான்அது அவ்வாறே ஆகுக!” என்றார் இளைய யாதவர்.எண்ணி துணிக கருமம் ,ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்ந்தது ஸ்வேதன் மற்றும் சங்கன் செயல்கள் .
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர் .