Monday, July 23, 2018

போர் எழுகை




ஜெ

துரியோதனன் ஆசிவாங்க வரும் அந்தக்காட்சி ஒரு பெரிய மனச்சுமையை அளித்தது. அந்தக்காட்சியிலும் சரி திருதராஷ்டிரர் ஆசி வழங்கும் காட்சியிலும் சரி ஒன்றுமே நிகழவில்லை. சம்பிரதாயமான வாழ்த்துக்கள் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால் அங்கு நின்றவர்களின் முகபாவனைகள் மனநிலைகள் நுட்பமாக அந்தச்சூழல் எல்லாவற்றையும் சொல்லி அங்கு நாமும் நின்றிருப்பதைப்போன்ற உணர்ச்சியை உருவாக்குகிறீர்கள். அதோடு அந்த கூடம் முன்பு உற்சாகச்சிரிப்புகளால் நிறைந்திருந்ததை நினைவூட்டுகிறீர்கள். அந்த விடைபெறல் நிகழ்ச்சிகள் மகாபாரதப்போரே ஏற்கனவே முடிந்துவிட்டன என்ற துக்கத்தை அளிப்பவையாக இருந்தன

ராஜ்