Wednesday, July 11, 2018

மானுடரை மதிப்பிடுதல்



அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். இன்றைய அத்தியாயம், செந்நா வேங்கை – 39ல் உள்ள மானுடரை மதிப்பிடுதல் பற்றிய வரிகளிலும், தந்தையைப் பற்றிய வரிகளிலும் நேரடியாக பிணைந்துவிட்டேன். எப்படி மாறுவதென்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு துளி எஞ்ச வேண்டுமென்று விரும்புகிறேன். திடீரென்று விளக்கை போட்டுவிட்டதைப் போல, இன்று எனக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டது. கலங்கிவிட்டேன். என்னால் நீண்ட நேரம் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இனிமேல் மாறுவதற்கு முயற்சி எடுக்கிறேன்.
நன்றியுடன்,
சு.தீபப்பிரசாத்.