Saturday, July 21, 2018

காந்தாரி




அன்புள்ள ஜெ

காந்தாரி துரியோதனனை வெற்றிபெறும்படி வாழ்த்தவில்லை. தர்மம் ஜெயிக்கட்டும் என்றுதான் வாழ்த்தினாள். ஆகவேதான் அவர்கள் இறந்தார்கள் என்று ஒரு கதை உண்டு. அது கடைசியில் ஸ்திரீபர்வத்தில் வரும் கதை. அந்தக்கதையை கொண்டு இன்றைக்கு வந்திருக்கும் உச்சத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால் இந்த வார்த்தையைச் சொல்பவளாக ஆரம்பம் முதலே கொஞ்சம் கொஞ்சமாக காந்தாரியை உருவாக்கிக் கொண்டுவந்தீர்கள். ஆகவேதான் பேரன்னையாக அமர்ந்து அவள் அதைச் சொல்லும்போது மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது

ஆர். அருண்