Friday, July 27, 2018

தளம்



அன்பு ஜெமோ சார்,
     
                
தளம் நேற்று இரவிலிருந்துதிறக்கவில்லை. வெறுமையாக உள்ளது. நீங்கள் இமையம் சென்ற போது,  இந்தத் தனிமை கூட தங்களுக்கு வேண்டவில்லையெனில், வெண்முரசிற்கு என்னதான் மதிப்பென்றே கருதினேன். ஆனால் அப்பொழுது தளம் எங்களுடன் இருந்தது.மீள்வாசிப்பிற்கு திட்டமிட்டனவற்றையும், வாசிக்காமல்(அது கடல்) விட்டனவற்றையும் தேடித்தேடி வாசிக்கவே நேரம் சரியாக இருந்தது.
                  
ஆனால் தளம் திறக்காத ஓர் நாள்...  சகாதேவனை பிரிந்த நீர்க்கோல நகுலனை நினைத்துக் கொண்டேன்.
                 
இக்கடிதத்தை நேற்று எழுதத் தொடங்கினேன்.இன்று தளம் திறந்து விட்டது.
             நன்றி சார்.