Sunday, July 29, 2018

ஆடி



மதிப்பிற்குரிய ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு,

என்னுடைய பெயர் தாமரைச் செல்வன். மின்னணுவியல் பொறியியல் படித்த நான்
தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறேன்.
http://www.jeyamohan.in/ என்கிற இணையதளத்தில் தாங்கள் பகிர்ந்து வரும் வெண்முரசு  ஆக்கத்தின் ரசிகன் நான்.
அதன் எழுத்து நடைக்கும்அங்கே பொதிந்திருக்கும் அற்புதமான கதைக் களத்திற்கும், நீங்கள் அளிக்கும் விவரங்களுக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதேபோல் திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அன்பு நண்பர் அருட்செல்வ பேரரசன் அவர்களும் மகாபாரதத்தின் மூலமே எனக்கு நண்பர் ஆனார்.
மகாபாரதத்தின் அவரது மொழிபெயர்ப்பை நான் தொடர்ச்சியாக படிக்கும் பொழுது,  உண்டானது மகாபாரதம் யுத்தம் மார்கழி மாதம் நடந்தது என்று பண்டிதர்கள் சொன்னது தவறாக இருக்குமோ என்ற சந்தேகம். அருட்செல்வ பேரரசர் மகாபாரதத்தின் மூல ஸ்லோகங்கள் மற்றும் கங்கூலியின் மொழி பெயர்ப்பு ஆகியவற்றின் இணையதள தோடர்புகளை அளிக்கஅவற்றின் மூலம் எனது ஆய்வுகளைத் தொடங்கினேன்.
நான் ஜோதிடத்தை 12 ஆம் வகுப்பு விடுமுறையில் என் தந்தையிடம் இருந்த புத்தகங்கள் மூலம் கற்றவன். வானியலில் தீராத ஆர்வம் உள்ளவன். சமஸ்கிருதத்தை ஆர்வத்தின் மூலம் சற்றே கற்றவன். மேலும் பொறியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியதால் ரூட் காஸ் அனலிஸிஸ் எனப்படும்மூல காரண ஆய்வின் நுணுக்கங்கள் அறிந்தவன்.
மகாபாரதத்தின் வியாசரின் ஸ்லோகங்களை மட்டுமே எனது ஆய்வின் மூலமாக கொண்டுசமஸ்கிருதம்வானியல்ஜோதிடம்,தர்க்கம் ஆகிய அறிவியல்களின் துணையோடு மகாபாரதப் போர் நடந்தது ஆடியாமார்கழியா என்ற இந்த ஆய்வுக் கட்டுரையை வடித்துள்ளேன்.
தாங்கள் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர் என்பதை நான் அறிவேன். என்னுடைய இந்தக் கட்டுரையை வாசித்துஇதில் உள்ள குறை, நிறைகளை சுட்டிக் காட்டிஇந்தப் படைப்பை முழுமையாக்கிஒரு மதிப்புரையும் அளித்தால் நான் மகிழ்வேன்.
இந்த நூலைப் படித்த சேலம் பகுதியில் வாழும் “வைணவக் கடல்” எனப் பட்டம் பெற்றசமஸ்கிருத வல்லுனர், 50 ஆண்டுகளுக்கும் மேல் வைணவ சேவை செய்து வருபவர்ஜோதிட வல்லுனர்தருமபுர ஆதினத்தில் பயின்றவர் ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்இதில் உள்ள ஜோதிட ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் மிகச்சரியானவை என மனமுவந்து வாழ்த்தி இருக்கிறார்.  இவர் மார்கழி மாதம் பாரதப்போர் நடந்தது என மிகத் தீவிரமாக நம்புபவர் ஆவார்.

தமிழ்நாட்டில் ஆடி மாதம் மகாபாரதப் போர்களம் என்பது மிகவும் நீடித்து நிற்கும் நம்பிக்கையாகும். பாமரர்களின் நம்பிக்கை,பண்டிதர்களின் முன் மௌனித்து விடுகிறது.
இந்த மௌனங்களின் முதல்குரலாய் இந்த நூல் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
கடையெழு வள்ளல்களில் அனைத்தும் சங்கத்தமிழர் பெயராய் இருக்க இடையேழு வள்ளல்கள் எனப்படும் இடைச்சங்க காலத்து வள்ளல்களில் மகாபாரத கதாபாத்திரங்களே உள்ளனர்இடைச்சங்க காலத்தில் மகாபாரதம் ஒரு சங்க நூலாக இருந்திருக்க வேண்டும் என்பதும், அதன் எச்சமே தமிழரிடையே உலாவி வரும் மகாபாரத கதைகளின் வேறுவேறு வடிவங்களுக்கு அடிப்படை என்பதும் என் நம்பிக்கை ஆகும்.

அந்த நீண்ட ஆய்வின் முதற்கட்டமே தமிழரின் அடிப்படை நம்பிக்கையான ஆடி மாதப் போர் என்பதை நிறுவுவது ஆகும்.

நான் எழுத்துலகில் பரிச்சயம் இல்லாதவன்
பதிப்பகங்கள்வினியோகம் என்ற எந்த அறிவும் தொடர்பும் இல்லாதவன். குடும்ப சூழ்னிலைகள் காரணமாக செய்யும் தொழிலையும் விடமுடியாமல்அறிவுத்தாகம் காரணமாக எழுத்தையும்படிப்பையும் கொண்டவன்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எங்களைப் போன்ற காட்டுக் கொடிகளுக்கு ஆதாரமான உயர்ந்த மரங்களைப் போல் இருக்கும் என நம்புகிறேன்.

எனவே மனம் கனிந்து இந்த நூலைப் படித்து
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துஇந்த நூல் வெளியாக உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு

தாமரைச் செல்வன்.

அன்புள்ள தாமரைச்செல்வன்

தென்னக மகாபாரத தொன்மங்களில் ஆடிமாதம் என்றே சொல்லப்பட்டுள்ளது

உங்கள் ஆய்வு கணிசமான பகுதி புரியவில்லை என்றாலும் புரிந்தவரை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகவே உள்ளது

ஜெ