Saturday, July 28, 2018

பானுமதி




ஜெ

பானுமதி எவ்வளவு நிதானமாக நுட்பமாக நாட்டை ஆட்சி செய்கிறாள் என்பதை நாலைந்து அத்தியாயங்கள் தொட்டுக்காட்டிக்கொண்டே செல்கின்றன. மிக இயல்பான அத்தியாயங்கள் அவை. அவற்றின் வழியாக ஒரு போரில் படைகள்  போனபின்னர் ஊருக்கு என்ன ஆகும் என்று காட்டுகிறீர்கள். எப்படியெல்லாம் போரில் படைகளை ஒருங்கு செய்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதில் எழும் நிர்வாகச் சிக்கல்களும் தெரிகின்றன. பானுமதி திரௌபதிக்கு ஒருபடியும் குறைவானவள் அல்ல என்பதும் சொல்லப்போனால் ஆணவம் கொண்டவள் என்பதனால் திரௌபதி ஒருபடி குறைவானவள் என்பதும் தெரிகிறது


மனைவி என்றால் சகதர்மிணி. அதற்குச் சரியான உதாரணம் பானுமதிதான்

ஆர்.நாகராஜ்