Thursday, July 23, 2015

வழிகள் 3

நன்றி மகராஜன் அருணாசலம்.

1.திருஷ்டத்யும்னன் முதலில் வரும்  பாதை முன்னால்  கிருஷ்ணன் காம்பில்யம் சென்ற பாதை என்று நான் புரிந்து கொண்டேன். தேவபாலபுரி வரை கடலில்  சென்று அங்கிருந்து சிந்து வழியாக.... அல்லவா?

2... மகதத்துடனான போர் இல்லையே என்பது என் முக்கிய வினா அல்ல  அதில் நீங்கள் சொல்லும் விளக்கம் போலவே நானும் நினைத்தேன். .கங்கையிலும்  யமுனயிலும் மாறி மாறி பயணிக்கும் போது    பிரயாகை பற்றிய குறிப்புகளே  இல்லையே என்று தான் வியந்தேன். .

3.மூன்று வழிகள் சொல்லப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன். இந்த மூன்றாவது வழி சற்று குழப்பமாக உள்ளது.நான் நினைப்பது போல சரமாவதி, சம்பல் அல்லாமல் வேறு  ஒன்றாக இருக்கலாம்.. தெரியவில்லை.

               உண்மையில் வெண் முரசுக்கு வெளியிலும் தேடுவதும் பல் வேறு படைப்புகளுடன் அதனை  ஒப்பிட்டு வாசிப்பதும்   அதன் வாசிப்பை மேலும் செழுமை ஆக்குகிறது என்பதே  என் அனுபவம்.தொடர்ந்து பேசுவோம்.

வெ சுரேஷ்