Thursday, July 23, 2015

கனவுகள்


நல்ல பதிவு அருணாச்சலம். நன்றி. [வெண்முரசில் கனவுகள்]

கனவும், மயக்கமும் நடக்கும் தருணங்கள் பெரும்பாலும் தர்க்கத்தை மீறி நடக்கும் செயல்கலுக்காக, ஒரு படிம தன்மையுடன் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குள் நடக்கும் மாற்றங்களுக்காக, அவர்களின் குணமாற்றங்களுக்காக சொல்லப்படுகிறது. எனக்கு தோன்றிய அப்படிப்பட்ட தருணங்கள் இவை.
  • அம்பிகை வியாசருடன் கூடும் இரவில் அவள் கனவில் தோன்றும் யானை. அம்பாலிகையும் கனவு காண்பாளா தெரியவில்லை.
  • விஷம் குடித்த பீமனுக்கு தோன்றும் கனவு.
  • சகுனி, சகோதரர்களுடன் ஒரு குழியில் விழுந்து சகோதர்களின் உயிர் தியாகத்தால் பிழைத்து வருவது. இறந்தவர்களின் எழும்புகளில் இருந்து பகடை செய்வது. - இதை பற்றி ஜெ சொன்னார். இது சமண மகாபாரத்தில் வரும் கதை. இது மகாபாரத கதைக்குள் அடங்காது, ஏனெனில் சகுனியின் சகோதரர்கள் யாரும் சாவதில்லை. இருந்தாலும் இந்த கதை நன்றாக இருப்பதால் இதை கனவு காட்சியாக வைத்ததாக சொன்னார்.
  • துரியோதனன் ஸ்தூணகர்ணனை சந்தித்து தன்னுள் இருக்கும் பெண்மையை அடித்து கொள்ளுமிடம். இப்படி ஒரு காட்சி சிகண்டிக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  https://groups.google.com/d/msg/venmurasu-readers-discussions/b-vKqJja2ec/f2UsZ_w0DPoJ
  • வஜ்ரமுகி குருவி வரும் இடங்கள்.
  • குந்தி சூரியனுடன் கூடுமிடம்.
  • அம்பை முன் தோன்றும் மூன்று பெண் தேவதைகள்.

இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. வெண்முரசை பற்றி நெடுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.

ஹரீஷ்