Saturday, July 18, 2015

நாமறியா காரணம்

ஆசிரியருக்கு,

தற்போதைய பகுதிகள் அதிவிரைவுடன் செல்கிறது , மிக வெற்றிகரமாக சியாமந்தகத்தின் எல்லா இயல்புகளையும் புறவயமாக மானுட மனதுடனும், வரலாற்று நிகழ்வுடனும் தத்துவார்த்தமாக இணைத்து விட்டீர்கள்.

இன்று கிரிதவர்மன் அவைபுகுவதும் அக்ரூரர் அவைபுகுவதும், அவர்கள் சொற்களுக்காக நாம் காத்திருப்பதும் அபாரம். நாமறியாத ஒன்று சியாமந்தகத்தினுள் உறைந்திருப்பது போல நாமறியா ஒரு காரணத்தை அக்ரூரரும் கிருதவர்மனும் சொல்லப் போகிறார்கள் எனவே உள் மனம் சொல்கிறது, அது ஒரு திருப்பமாக அமையக் கூடும். பெரும்பாலும் இதுபோன்ற காரண காரியங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும்.  நீங்கள் இங்கிருந்தால் கூட தொலைபேசியில் அழைத்திருப்பேன். 

காத்திருக்கப் பொறுமையின்றி, 

கிருஷ்ணன்.