Sunday, July 12, 2015

நகை

திரு, ஜெ,

 “தாங்களும் தலைக் கவசம் அணிவதில்லையா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், இந்தத் தலையை என்னை வெல்ல விழைபவனுக்காக திறந்து வைத்திருக்கிறேன்” என்றார் பலராமர் நகைத்தபடி.".

தற்போது நடந்து கொண்டிருக்கும் போர், சூழ்ச்சி, அரசுசூழ்தல், பேராசை வசப்படுதல் ஆகியவற்றின் இடையே நாங்கள் பிணைக்கப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கும்போது, பலராமரின் நகைச்சுவை பொருந்திய, எளிய இயல்பான சொல்லாடல், அனைவரையும் மகிழ்ச்சியை நோக்கிச் செலுத்துகிறது. அவருடைய களங்கமற்ற தூய மனம் எந்த நேரமும், குளிர்நீரில் மூழ்காமல் மிதந்து நடனமிடும் மயிற்பீலியைப் போலவே இலகுவாக நடனமிடுகிறது.

எதிர்காலத்தில் இவர் எப்படி திரௌபதியின் துகில் உரியப்படும் நிகழ்வை எளிதாகக் கடக்கப் போகிறார் என்ற வினா எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கணபதி கண்ணன்