Tuesday, July 28, 2015

இன்னொரு கம்சன்

ஆசிரியருக்கு,

சிசுபாலன் முதலில் ருக்மணியை அணுகி தோற்ற  பின் தான்  பாமையை அணுகுகிறான் என கதையின் காலக் கோட்டை வைத்து ஊகிக்கிறேன். அனைத்தும் சாதகமான சூழலில் ருக்மணி நழுவுகிறாள் என்றால் பாமையிடம் நுழையவே மறுக்கப் படுகிறது. 

இருவரிடமும் உள்ளார்ந்துள்ள கிருஷ்ணன் தனது செயலை  நிகழ்த்துகிறான். இங்கு சிசுபாலன் இன்னொரு கம்சனாக தோற்றம் கொள்கிறான்.  தோற்றாலும் கிருஷ்ணன் கையால் ஒரு கடைத்தேற்றம்.

பார்க்காத துவாரகையை உணர்கிறாள் பாமை என்றால் பார்க்காத கிருஷ்ணனை நினைவில் மீளும் அந்த சூதனின் பாடலால்  உணர்கிறாள் ருக்மணி. அழகான இணைப்பு இது.     

கிருஷ்ணன்.