Saturday, April 30, 2016

கன்னி ராசி

 
 
நாவலின் இந்தப் பகுதி கன்னிமாதத்தில் (பூரட்டாதி) நிகழும் தேவியின் ஆடல். கன்யாவனத்தில் நிகழ்வது பொருத்தம். ஒவ்வொரு மாதத்திலும் அதற்கேற்ற களத்தில் ஆடல்கள் நிகழ்வதைக் கவனித்திருக்கலாம். மேடமாதத்தில் இந்திரன் மேடமாக வருதல். இடவமாதத்தில் ஜரை அன்னையால் இடப நன்னாளில் தோன்றிய குழந்தை எருதன் ஜராசந்தனாக ஆதல். மிதுனமாதத்தில் இணையரின் (நரநாரணர்) வெற்றி. கடகமாதத்தில் கணிகரின் எழுச்சி. சிம்மமாதத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் சிம்மம் ராஜசூயத்திற்காக எழுதல். இப்போது கன்யாவனம்.

மொத்த மகாபாரதக் கதையையும் இந்நாவலின் பன்னிரு படைக்களக் காய்கள் ஒன்றை ஒன்று துணைத்தும் பகைத்தும் வெட்டியும் ஒட்டியும் ஆடும் ஆடலாக மட்டுமே வாசிக்கமுடியும் போலும்...
 
திருமூலநாதன்