Sunday, April 24, 2016

ஆன்மிகப்பயணம்



ஜெ,

இன்றைய வெண்முரசில் சக்கரத்துடன் சிசுபாலனுக்குள்ள உறவு பலதளங்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறது. அவனுக்குத்தெரியும், அவன் ஆணவத்தால் அழிபவன் என்று. அப்படியென்றால் அதுவே ஆகட்டும் என அவனே முடிவுசெய்கிறான். அவன் எந்த குணாதிசயங்களின் தொகுப்பு என்று முன்னரே வந்துவிட்டது.  ஒரே உணர்ச்சிதான் ராவணனாக கம்சனாக நரகாசுரனாக எல்லாம் மீண்டும் மீண்டும் மன்ணிலே வெளிப்பட்டபடியே இருக்கிறது என்று சொல்கிறது இந்த இடம்

அந்தச்சக்கரம் அவன் கழுத்தை வெட்டப்போகிறது. அவன் இளமையிலிருந்தே அந்தச் சக்கரத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறான். ஒருமாதிரியான ஆன்மீகப்பயணம் அது என்று சொல்லலாம்

ஜெயராமன்