Wednesday, August 1, 2018

ஈஸோவாஸ்யம்



/
அன்புள்ள ஜெ ,


திருதராஷ்டிரன்க்கு காந்தாரியை பெண் கேட்டு செல்வதற்கு பீஷ்மரை செல்லும்படி இணங்க வைப்பதற்காக , பீஷ்மரின் அறைக்கு  விதுரன்  செல்லும் காட்சியில் பீஷ்மரின் அறையில் இருக்கும் பொருட்கள் பற்றி ஒரு சித்திரம் வருகிறது . அழகற்ற பணி கருவிகள் ,முனை மழுங்கிய வாட்கள் , நேர்த்தியற்ற மரப்பொருட்கள் என , பின் அவர் அகத்தில் பல வாழ்க்கை வாழ்பவர் என விதுரன் எண்ணிக்கொள்வது போன்ற சித்திரமும் வருகிறது .

புற உலகை பொருட்படுத்த கூடியவர்கள் தங்களை ,தங்களை சுற்றியிருப்பவற்றை தங்களுக்கு விருப்பமான  வடிவத்தில் மாற்றியிருப்பார்கள் என இதை வாசித்த போது ஞாபகம் வந்தது , இதிலேயே திருதராஷ்டினன்  இசை கேட்கும்படியான அறையை கொண்டிருப்பதும் , பாண்டுவின்  இடம் வண்ண  ஓவியங்களால்  சூழ்ந்திருப்பதையும் இதற்கான உதாரணங்களாக  சொல்லலாம் 
.
பீஷ்மரின் இயல்பு என பயண ஆர்வம் ,பற்றின்மை என சொல்லலாம் , கனவுலகில்  வாழ குடிப்பவர்களுக்கு இவ்விரண்டு  இயல்புகளும் இருப்பதை கவனித்திருக்கிறேன் இப்போது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் எனும் வரி வரும்  உபநிட பாடல் ஞாபகம் வருகிறது. 

ராதாகிருஷ்ணன்