Saturday, August 29, 2020

ஆயுதம்

 


அன்புள்ள ஜெ

களிற்றியானைநிரையில் அஸ்தினபுரியின் தொல்குடிகள் அந்நகரை கைவிட்டுவிட்டுக் கிளம்புகிறார்கள். ஏன் கிளம்புகிறீர்கள் என்று யுதிஷ்டிரர் கேட்கிறார். இங்கே இனிமேல் ஆயுதமில்லை. இந்நகரின் வாசலில் நின்ற கைவிடுபடைகள் நாண் தளர்ந்துவிட்டன. ஆயுதமில்லா நகரில் வாழமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆமாம் இனிமேல் இந்நகர் ஆயுதமேந்தாது, ஆயுதத்தால் வந்த அழிவு போதும் என்று * சொல்கிறார்

ஆனால் அந்தக்குடிகள் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அந்த கைவிடுபடைகளை அந்நகர் ஏந்திய ஆயுதமெனப் பார்க்கிறார்கள். அந்த ஆயுதம்தான் குலக்கலப்பு நடைபெறாமல் பாதுகாத்தது என நம்புகிறார்கள். தங்கள் குலத்தூய்மையைக் காப்பதற்காக கிளம்புகிறோம் என்கிறார்கள். கோபுரகலசத்து விதைபோல எங்கள் குலத்தின் குருதி பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள்

அரசின் ஆயுதம் என்பது வெளியெதிரியை தடுக்க என்றுதான் பொதுவாகத் தோற்றமளிக்கும். ஆனால் அது அந்த நாட்டின் அமைப்பையும் ஸ்டேடஸ்கோவையும் காப்பாற்றி வைக்கத்தான். அது அத்தனைபேருக்கும் தெரிந்திருக்கிறது

மாதவ்