Saturday, August 29, 2020

அறம்

 


அன்புள்ள ஜெ

கல்பொருசிறுநுரை நாவலின் தொடக்கவரி எனக்கு ஒரு துணுக்குறலை அளித்தது. சொல்லச் சொல்ல சிதறுவதும் எண்ண எண்ணப் பெருகுவதும் வகுக்கும்தோறும் மீறுவதுமான ஒன்றை அறம் என்றனர் முன்னோர் இத்தனை அறம்பேசி, இத்தனை தத்துவமும் ஞானமும் விவாதித்து, ஒரு பெரிய போர் நடந்து முடிந்து, அறம் வென்றது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த வரி வருகிறது. அதிலிருக்கும் கூர்மையும் இரக்கமில்லாத தன்மையும் பீதியை உருவாக்கியது. ஏன் மகாபாரதம் இத்தனை பெரிய பிரதியாகியது, மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெண்முரசு அதைவிட மூன்றுமடங்கு பெரிய பிரதியாகியது என்பதற்கான விளக்கம் இந்த வரிதான்

சாந்தகுமார்