Monday, August 17, 2020

முதற்கனல் வாசிப்பு

 

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல் தொடரை முழுமையாக வாசித்தவர்கள் நிறையப்பேரை பார்க்கிறேன். நான் இப்போதுதான் முதற்கனலை முடித்திருக்கிறேன். மழைப்பாடல் தொடங்கவேண்டும். முதற்கனல் நாவலை தொடங்க விரும்பும் வாசகர்களுக்காக மட்டும் ஒரு சந்திப்பை நீங்கள் இணையம்வழி நடத்தலாமே. அவர்கள் மட்டுமே பங்கெடுக்கவேண்டும். அவர்கள் அந்நாவல் எப்படி வாசிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்

அல்லது முதற்கனல் நாவலை வாசிக்கும் ஓர் அழைப்பை விடுத்துவிட்டு ஒருமாதம் நாள்கொடுத்து முதற்கனல் பற்றி மட்டும், புதிதாக வாசித்தவர்களிடம் ஓர் உரையாடலை நீங்கள் நடத்தலாம். தயங்கிக்கொண்டிருந்தவர்க்ளும் இந்த ஏழாண்டுகளில் புதிதாக வாசிக்க வந்தவர்களும் அதை வாசிக்கத்தொடங்க அது ஊக்கமூட்டுவதாக அமையும்

ரமேஷ்குமார் எம்