Tuesday, August 25, 2020

வாசிப்பியக்கம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த கொரோனா காலகட்டத்தில் புதியவாசகர்கள் வெண்முரசு வாசிக்க ஒரு கூட்டான வாசிப்பியக்கத்தை நீங்கள் அறிவிக்கலாமென நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு மாதம் டைம் அளித்து ஒரு கட்டுரைப்போட்டி போல அறிவிக்கலாம். முதற்கனல் முதல் வாசிப்பவர்கள் தங்கள் கடிதங்களை அனுப்பும்படிச் சொல்லலாம்.அவற்றை பிரசுரிக்கலாம். மறுபடியும் முதற்கனல் வந்துகொண்டிருந்தபோது நடந்ததுபோல ஒரு வாசிப்பியக்கம் நடைபெறும் என்று தோன்றுகிறது.

ஆர்.ராஜா