Saturday, August 29, 2020

புழுதி

 




அன்புள்ள ஜெமோ

உருவகமாகச் சொல்லப்படும் விஷயங்களின் கவித்துவமே வெண்முரசின் அழகு. நான் நூற்றுக்கணக்கான வரிகளைக் குறித்து வைத்திருந்தேன். அதன்பின் குறிப்பதை விட்டுவிட்டேன். நேற்றுவந்த அத்தியாயத்தில் இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது. 

புழுதி மண்ணின் மெல்லிய கை. கொடியின் தளிர்ச்சுருள்போல. இளங்குழவியின் விரல்நுனிபோல. வந்து தொடும். தழுவும். இழுத்து மண்ணுக்குள் செலுத்தும். விழுங்கிப் புதைத்து மேலே எழும்

எங்கள் வீடு கிராமத்திலிருக்கிறது. ஒவ்வொரு முறை செல்லும்போதும் முழு வீடுமே புழுதியால் மூடியிருப்பதைக் காண்பேன். ஆயிரம் ரூபாய் வரை தூசிதட்டவே செலவாகும். புழுதி விடாப்பிடியாக எங்கள் வீட்டை கவ்விக்கொண்டே இருக்கிறது.புழுதிக்கும் எங்களுக்குமான போராட்டம்தான் ஐம்பதாண்டுகளாக நடக்கிறது. கடைசியில் புழுதிதான் ஜெயிக்கும்

அர்விந்த்குமார்